சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தமிழ்த் திரையுலகத்தில் இதுவரை இப்படி ஒரு வெளியீடு நிறுத்தப் போராட்டம் நடைபெற்றிருக்க வாய்ப்பில்லை. அனைத்துத் தயாரிப்பாளர்களும், அவர்களது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சொன்னபடி அவர்களது படங்களை வெளியிடாமல் நிறுத்திவிட்டார்கள். அந்த அளவிற்கு அவர்கள் விபிஎப் என்ற டிஜிட்டல் சேவை கட்டணம் மூலம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது இதிலிருந்து தெரிய வருகிறது.
இந்த மார்ச் மாத்த்தில் நேற்றுடன் சேர்த்தால் 5 வெள்ளிக் கிழமைகள் கடந்திருக்கிறது. வாரத்திற்கு சராசரியாக நான்கு படங்கள் வருவது வழக்கம். இந்த 5 வாரங்களில் 20 படங்களாவது வெளிவந்திருக்கலாம். ஆனால், தயாரிப்பாளர் சங்கத்தை மீறி யாரும் படங்களை வெளியிடவில்லை, ஒரே ஒருவரைத் தவிர. இயக்குனர் பவித்ரன் அவர் இயக்கிய 'தாராவி' படத்தை மட்டும் மார்ச் 2ம் தேதி வெளியிட்டார். அந்தப் படம் வந்ததும் தெரியாமல், போனதும் தெரியாமல் கடந்து போனது.
இந்த மாதம் வெளிவரவிருந்து 20 படங்களும் எப்படியும் ஸ்டிரைக் முடிந்து வெளிவரத் தயாராகும். இதனால், அடுத்த சில மாதங்களுக்கு படங்களை வெளியிடுவதில் சில சிக்கல்கள் இருக்கலாம். இவ்வளவு பெரிய ஸ்டிரைக்கையே நடத்திக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர் சங்கத்திற்கு அந்த சிக்கலைத் தீர்ப்பது பெரிய விஷயமில்லை.
முழுஆண்டுத் தேர்வுகளும் இடைநிலை வகுப்புகள் வரை முடிந்து வருகிறது. பொதுத் தேர்வு எழுதுபவர்களைத் தவிர மற்றவர்கள் குடும்பத்துடன் இதனால் படம் பார்க்க வரலாம். எனவே, சீக்கிரமே ஸ்டிரைக்கை முடிவுக்குக் கொண்டு வந்தால், மார்ச் மாதம் இழந்த வசூலை இந்த கோடை விடுமுறையில் எடுத்துவிடலாம்.