ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 500 படங்கள் நடித்துள்ள பழம்பெரும் நடிகை ஜெயந்தி, உடல்நலக் குறைவால் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.
ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்த ஜெயந்தி, தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நீர் ஆகாரங்கள் உணவாக வழங்கப்பட்டு வருகிறது. நாளை, அவர் சாதாரண வார்டுக்கு மாற்றம் செய்யப்பட இருக்கிறார்.
இதனிடையே அவர் இறந்துவிட்டதாக செய்தி பரவியது. இதை ஜெயந்தியின் மகன் கிருஷ்ணகுமார் மறுத்துள்ளார். மருத்துவ நிர்வாகமும் அவர் இறந்ததாக வந்த செய்தியை மறுத்து, அறிக்கை வெளியிட்டுள்ளது.