ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களின் அமோகமான வரவேற்பு, வெற்றிக்குப் பிறகு சரித்திரப் படங்களை எடுத்தால் மக்கள் வரவேற்பு கொடுப்பார்கள் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
சமீபத்தில் வெளிவந்த 'பத்மாவத்' படமும் நல்ல வசூலைப் பெற்றது. சர்ச்சைகள் எழாமல் இருந்தால் அந்தப் படம் இன்னும் அதிகமான வசூலைப் பெற்றிருக்கலாம் என்கிறார்கள்.
இதனிடையே, இந்தியாவின் பெரும் தொழிலதிபரான முகேஷ் அம்பானி, அமீர்கானுடன் இணைந்து 'மகாபாரதா' படத்தைத் தயாரிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதற்காக 1000 கோடி ரூபாய் முதலீடு செய்ய அவர் தயாராக இருக்கிறாராம். நீண்ட நாட்களாகவே மகாபாரதக் கதையில் நடிக்க வேண்டும் என்பது தனது ஆவல் என அமீர்கான் சொல்லி வருகிறார்.
அமீர்கான் நடித்த 'தங்கல்' படம் சீன வசூலில் சாதனை புரிந்ததால் அவருடைய பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் அதிகரித்துள்ளது. 'தங்கல்' படம் இதுவரை 1900 கோடி வசூலித்துள்ளதாகச் சொல்கிறார்கள். அதனால், அமீர்கான் 'மகாபாரதா' படத்தை 1000 கோடியில் தயாரித்தால் 3000 கோடி வரை வசூல் அள்ளலாம் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.