சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தமிழ்த் திரையுலகத்தில் மிகப் பெரிய திட்டத்துடன் அடி மேல் அடி எடுத்து வைத்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன். தன் திரையுலகப் பயணத்தை சாதாரணமாக ஆரம்பித்தவர் படிப்படியாக உயர்ந்து முன்னணி ஹீரோயின்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார். அடுத்து அவர் நடிக்க உள்ள படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
'இன்று நேற்று நாளை' படத்தை இயக்கிய ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அடுத்து நாயகனாக நடிக்க உள்ள படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்தப் படம் சம்பந்தமாக சிவகார்த்திகேயன், ரவிகுமார் மற்றும் ரகுமான் இருக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் வெளியானது.
இதுப்பற்றி ரவிகுமாரிடம் பேசியபோது, அந்தபோட்டோ பழையபடம். தற்போது ஸ்டிரைக் நடப்பதால் படம் தொடர்பான எந்த வேலையையும் முன் எடுத்து வைக்கவில்லை. சிவகார்த்திகேயன், பொன்ராம் படத்தில் நடிக்கிறார். அதன் படப்பிடிப்பு இன்னும் கொஞ்சம் இருக்கிறது. அது முடிந்த பிறகு தான் என் பட வேலையை ஆரம்பிக்க முடியும் என்றார்.
சயின்ஸ் பிக்ஷ்ன் ஆக உருவாக உள்ள இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பது படத்தையும், சிவகார்த்திகேயனையும் வேறு ஒரு கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.