ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷண் வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் உள்ளிட்ட துறைகளில், பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு, பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. 2018-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள், கடந்த ஜன., 25-ம் தேதி அறிவிக்கப்பட்டது. ஆயிரம் படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவுக்கு பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டது.
அதன்படி, பத்மவிருதுகள் வழங்கும் விழா, புதுடில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று(மார்ச் 20) மாலை நடந்தது. ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த், இளையராஜாவுக்கு பத்மவிபூஷண் விருது வழங்கி கவுரவித்தார்.
தேனி மாவட்டம், பண்ணைபுரத்தில் பிறந்த இளையராஜா, 1976-ம் ஆண்டு அன்னக்கிளி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானானர். அப்போது ஆரம்பித்த ராஜாவின் இசைபயணம், ஆயிரம் படங்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது.
இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.