தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடும் எதிர்ப்புக்கு இடையில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் பத்மாவத். இந்தப்படத்தில் தீபிகா படுகோனே சித்தூர் ராணி பத்மாவதி கேரக்டரில் நடித்திருந்தார். அப்போது அவர் அணிந்து நடித்த நகைகள், உடைகள் வடநாட்டு மக்களை பெரிதும் கவர்ந்தது.
குறிப்பாக ராஜஸ்தான் பெண்கள் அதனை பெரிதும் விரும்பினார்கள். படப்பிடிப்பில் தீபிகா படுகோனே 35 கிலோ எடை வரையிலான நகை, புடவைகள் அணிந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது வடநாட்டு நகை கடைகளில் பத்மாவதி கலெக்ஷன் என்ற தனி பிரிவை தொடங்கியிருக்கிறார்கள். தீபிகா படுகோனே நடித்த காட்சிகளை புகைப்படங்களாக வைத்து அதில் அவர் அணிந்திருந்த நகைகளை அருகில் காட்சிப்படுத்தி விற்பனை செய்கிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் பேன்சி நகை கடைகள், கவரிங் நகை கடைகளிலும் பத்மாவதி நகைகள் விற்கப்படுகிறது. மக்களின் ஆர்வத்தை கண்டு நகை வியாபாரிகளும் பத்மாவதி நகை தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
"படத்தின் வசூலை விட பத்மாவதி நகை வியாபாரம் அதிக அளவில் நடக்கும்" என்று வடநாட்டு நகை வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள். பத்மாவதியின் நகைகளுக்கு தென்னிந்தியாவில் வரவேற்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.