சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
ரகுமான் நடித்த 'துருவங்கள் பதினாறு' படத்தை இயக்கிய கார்த்திக் நரேன், அப்படத்தைத் தொடர்ந்து இயக்கியுள்ள படம் 'நரகாசூரன்'. அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், இந்திரஜித், ஸ்ரேயா, ஆத்மிகா முதலானோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இந்த படத்தை கார்த்திக் நரேனே தயாரித்துள்ளார்.
சிலபல காரணங்களால் நரகாசூரன் படத்தை கௌதம் வாசுதேவ் மேனனும் தயாரித்துள்ளதாக அறிவித்தார்கள். அதுவே இப்போது நரகாசூரன் படத்துக்கு மைனஸாகிவிட்டது.
இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிந்து இப்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை மே மாதம் ரிலீஸ் செய்ய கார்த்திக் நரேன் திட்டமிட்டுள்ளார்.
இதற்கிடையில் நரகாசூரன் படத்தின் ஓவர்சீஸ் ரைட்ஸை கார்த்திக் நரேனுக்கு தெரியாமல் கௌதம் வாசுதேம் மேனன் விற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கெளதம் மேனன் மீது அதிருப்தியில் இருக்கிறார் கார்த்திக்.
நரகாசூரன் படத்தின் தயாரிப்பிலிருந்து கௌதம் வாசுதேவ் மேனனை விலக்கிவிட்டு தானே வியாபாரத்தை முடித்து படத்தை வெளியிட கார்த்திக் நரேன் திட்டமிட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.