சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள அவருடைய 37வது படம் பற்றிய அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. 'அயன், மாற்றான்' ஆகிய படங்களுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணையும் படம் இது.
கே.வி. ஆனந்த் இதுவரை இயக்கியுள்ள, “கனா கண்டேன், அயன், கோ, மாற்றான், அனேகன், கவண்” ஆகிய படங்களில் இரட்டை எழுத்தாளர்களான சுபா முக்கிய பங்காற்றினர். கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றில் படத்திற்குப் படம் அவர்களுடைய பங்கு இருந்தது. நேற்று அறிவிக்கப்பட்ட சூர்யாவின் படத்தில் கே.வி. ஆனந்த், அவர்களை விட்டுவிட்டு பட்டுக்கோட்டை பிரபாகர் பெயரை அவருடைய குழுவினர் பெயரில் சேர்த்திருக்கிறார். அது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
பட்டுக்கோட்டை பிரபாகர் பல நாவல்களை எழுதியுள்ள ஒரு எழுத்தாளர், பல படங்களுக்கும் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். இவர் எழுதிய ஒரு அரசியல், ஆக்ஷன் கதையைத்தான் கே.வி. ஆனந்த், சூர்யாவின் 37வது படமாக இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதனால்தான், இந்தப் படத்தில் அவருடைய ஆஸ்தான எழுத்தாளர்களான சுபாவை கே.வி. ஆனந்த் இணைத்துக் கொள்ளவில்லை என்கிறார்கள்.
பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய எந்த நாவல் படமாக உள்ளது என்பது விரைவில் தெரிய வரலாம்.