சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தமிழ்த் திரையுலகத்தில் அடுத்தடுத்த போராட்டங்களால் மிகவும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதிய படங்கள் வெளிவராததால் வசூல் பார்க்க முடியாமல் தயாரிப்பாளர்களும், படங்களை பார்க்க முடியாததால் பொழுதுபோக்க முடியாமல் ரசிகர்களும் தவித்து வருகிறார்கள்.
இந்த போராட்ட சமயத்தில் எந்தத் தயாரிப்பாளரும் எந்த ஒரு விழாவையும் நடத்தக் கூடாது என தயாரிப்பாளர்களுக்கு வாய் மொழி உத்தரவு பிறப்பித்திருந்தது. அதையும் மீறி ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பாளரான கே.ஈ.ஞானவேல்ராஜா நோட்டா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பை கடந்த வாரம் நடத்தினார். அதற்காக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், அவருக்கு ரெட் போடப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன.
விழா நடத்தியது குறித்து தயாரிப்பாளர் சங்கம் கேட்ட விளக்கத்திற்கு கே.ஈ.ஞானவேல்ராஜா பதிலளித்துவிட்டதாகவும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றுதான் தகவல்கள் தெரிவிக்கின்றன. தயாரிப்பாளர் சங்கம் கேட்டுக் கொண்டதன் பேரில் ஞானவேல்ராஜாவும் நோட்டா படப்பிடிப்பைத் தள்ளி வைத்துவிட்டாராம்.