சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
டிஜிட்டல் சேவை நிறுவனங்களுக்கும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும் டிஜிட்டல் கட்டண விவகாரத்தில் ஏற்பட்ட மோதலால் கடந்த இரண்டு வாரங்களாக படங்கள் எதுவும் வெளியாகவில்லை. அதனால், கடந்த வாரத்திலிருந்தே பல ஊர்களில் பல தியேட்டர்களில் முதலில் கூட்டம் வராத சில கட்சிகளை மட்டும் ரத்து செய்தார்கள். அதன் பின் பல தியேட்டர்களை முழுமையாகவே மூடினார்கள். சில தியேட்டர்கள் மட்டும் கடந்த மாதம் வெளியான சில படங்களை வைத்தும், மற்ற மொழிப் படங்களை வைத்து குறைந்த எண்ணிக்கையிலான ரசிகர்களுடன் தியேட்டர்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இதனிடையே, இந்த விவகாரம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் இன்று மாலை சிறப்புக் கூட்டம் ஒன்று நடைபெற இருக்கிறது.
டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் கடந்த 12 வருடங்களில் சுமார் 1000 கோடி ரூபாய் வரை வருவாய் பெற்றுள்ளதாகவும், தயாரிப்பாளர்கள் தரப்பில் குற்றம் சாட்டுகிறார்கள். தியேட்டர்களில் திரையிடப்படும் விளம்பரக் கட்டணத்தைக் கூட டிஜிட்டல் நிறுவனங்கள் தான் எடுத்துக் கொள்கின்றன. மேலும், தயாரிப்பாளர்களிடமிருந்து பெற்ற பணத்திற்கான முறையான செலவினக் கணக்குகளையும் அவர்கள் இதுவரை தெரிவிக்கவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள்.
புதிய படங்கள் வெளிவராததால், பல தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. இன்று முதல் பெரும்பாலான தியேட்டர்களை மூட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. கடந்த 12 நாட்களுக்கும் மேலாக புதிய படங்களும் இல்லாததால் இதுவரை சுமார் 250 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.
ஒரு புதிய படம் வெளியானால் அதிகபட்சமாக ஒரு நாள் வசூலாக 10 கோடி வரை வசூலிக்கலாம். தியேட்டர்கள் சார்ந்த மற்ற வருவாயாக கூடுதலாக 10 கோடி வரை கிடைக்கும். டிக்கெட் கட்டணங்களில் கேளிக்கை வரியும், ஜிஎஸ்டி வரியும் அரசாங்கத்திற்குத்தான் சேரும். அதனால் அரசுகளுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் அரசு தரப்பில் அந்த வருவாய் இழப்பைத் தவிர்ப்பதற்காகவாவது அவர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என சிலர் தெரிவிக்கிறார்கள்.