ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டின் பிரபலமான நடிகையாக இருக்கும் சன்னி லியோன், தமிழில் வீரமாதேவி என்ற சரித்திர படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது.
சன்னி லியோன், நிஷா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் தனக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதை மகிழ்ச்சியுடன் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
அதில், இது கடவுளின் திட்டம். குறுகிய காலத்தில் 3 குழந்தைகளுடன் குடும்பத்தை உருவாக்க திட்டமிட்டோம். ஆஷர் சிங், கோவா சிங், நிஷா கவுருடன் எங்கள் குடும்பம் முழுமை அடைந்திருக்கிறது. சில வாரங்களுக்கு முன்னர் தான் எங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் பல ஆண்டுகளாகவே எங்கள் இதயங்களில் வாழ்ந்து வந்தனர். மூன்று குழந்தைகளின் பெருமையான பெற்றோர்கள் நாங்கள். உங்கள் எல்லோருக்கும் இது அதிர்ச்சி என்று கூறியிருக்கிறார்.
மற்றொரு டுவீட்டில், இந்த இரட்டை குழந்தைகள் வாடகை தாய் மூலம் பிறந்துள்ளன. மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ளார்.