ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு, மகாநதி என்ற பெயரில் தெலுங்கிலும், நடிகையர் திலகம் என்ற பெயரில் தமிழிலும் தயாராகி வருகிறது. இதில் கீர்த்தி சுரேஷ், சாவித்ரியாக நடித்து வருகிறார். சமந்தா, துல்கர் சல்மான் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பழம்பெரும் நடிகை ஜமுனா, சாவித்ரியாக நடிக்கும் கீர்த்தி சுரேசுக்கு தெலுங்கு மொழி தெரியாது. சாவித்ரியாக நடிக்க அவர் தகுதியானவர் அல்ல என்று தெரிவித்திருந்தார். இந்த கருத்து குறித்து கீர்த்தி சுரேஷ் கூறியிருப்பதாவது:
சாவித்ரியாக திடீரென்று நடிக்கவில்லை. நடிப்பது என்று முடிவான பிறகு அதற்கான பயிற்சி எடுத்துக் கொண்டு தான் வந்திருக்கிறேன். முதலில் அவரை பற்றி வந்திருக்கும் புத்தகங்களை படித்தேன். பிறகு சாவித்ரியின் மகள் சாமுண்டீஸ்வரியை சந்தித்து சாவித்ரியின் மேனரிசங்கள் பற்றி கேட்டுத் தெரிந்து கொண்டேன். அவரும் எனக்கு நிறைய விஷயங்களை சொன்னார். சாவித்திரியின் படங்கள் நிறைய பார்த்தேன். அதன் பிறகு நடிக்க பயிற்சி எடுத்தேன். அது இயக்குனர் உள்ளிட்ட பலருக்கும் திருப்தி ஏற்பட்ட பிறகே நடிக்க ஆரம்பித்தேன்.
சாவித்திரி அம்மாவுக்கும் எனக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. அவர் கிரிக்கெட் விளையாட்டு, நீச்சல், கார் டிரைவிங் மூன்றிலும் ஆர்வம் மிக்கவராக இருந்தார். நானும் இந்த மூன்றிலும் ஆர்வம் மிக்கவள். படம் வெளிவந்த பிறகு என் நடிப்பு பற்றி விமர்சித்தால் நன்றாக இருக்கும். என்கிறார் கீர்த்தி சுரேஷ்.