ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரேமம் மலையாள படத்தில் அறிமுகமானவர் சாய் பல்லவி. அதையடுத்து பிடா, எம்சிஏ போன்ற தெலுங்கு படங்களில் நடித்தார். அந்த படங்களும் வெற்றி பெறவே இப்போது தெலுங்கிலும் பேசப்படும் நடிகையாகி விட்டார் சாய் பல்லவி. இந்த நிலையில், தற்போது ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள கரு படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார்.
இந்த படத்தில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்துள்ளார் அவர். ஆனால் முதலில் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று ஏ.எல்.விஜய் அவரை தொடர்பு கொண்டபோது கதையைகூட கேட்காமல் நடிக்க மறுத்து விட்டாராம் சாய்பல்லவி. அதன்பிறகு அவரது அம்மாவை போனில் தொடர்பு கொண்டு கதையை சொல்லியிருக்கிறார் ஏ.எல்.விஜய். அதன்பிறகுதான் நடிக்க ஒப்புக்கொண்டாராம் சாய்பல்லவி.
அதோடு, இந்த கரு படத்தில் நடித்தபோது ஒவ்வொரு காட்சியையும் உள்வாங்கி நடித்த சாய் பல்லவி, காட்சிகளில் நடித்து முடித்ததும் ஓடிச்சென்று மானிட்டரில் பார்ப்பாராம். அது தனக்கு திருப்தியாக இருந்தால் மட்டுமே அதோடு நிறுத்திக்கொள்வாராம். இல்லையேல் மீண்டும் ரீடேக் எடுக்க சொல்வாராம். அந்த அளவுக்கு தான் நடிக்கிற ஒவ்வொரு காட்சிகளும் சிறப்பாக வரவேண்டும் என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார் சாய்பல்லவி.
அவரது ஆர்வத்தைப்பார்த்து, கரு படத்தில் அவருக்கு அப்பாவாக நடித்துள்ள நிழல்கள் ரவி, அம்மாவாக நடித்துள்ள கடலோரக் கவிதைகள் ரேகா ஆகியோர், எதிர்காலத்தில் சாய்பல்லவி மிகப்பெரிய நடிகையாக வருவார். அவரை மனதில் கொண்டு டைரக்டர்கள் கதை எழுதும் நிலை ஏற்படும் என்கிறார்கள்.