சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
கடந்த சில நாட்களாக சோஷியல் மீடியா முழுதும், ஒரு பாடலில் கண் சிமிட்டல் மூலம் புகழ்பெற்ற புருவ அழகி பிரியா பிரகாஷ் வாரியரை பற்றிய பேச்சாகவே இருந்தது. இவர் இடம்பெற்றிருந்த பாடல் வரிகள் குறித்த சர்ச்சையால் இவர் மீதும் சில மாநிலங்களில் வழக்கு தொடுக்கப்பட்டு, அதில் உச்சநீதிமன்றம் தலையிட்டு அவற்றை தடை செய்ததில் இன்னும் பரபரப்பாகி விட்டார் பிரியா வாரியர்..
இந்த நிலையில் நேற்று கொச்சியில் நடைபெற்ற இந்தியன் சூப்பர்லீக் கால்பந்து போட்டியில் சென்னை அணியுடன் மோதிய கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை உற்சாகப்படுத்துவதற்காக பிரியாவாரியரும், அவருடன் போட்டியாக புருவம் உயர்த்தி பிரபலமான நடிகர் ரோஷனும் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியை காண கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரும் வந்திருந்தார். அவரை ஸ்டேடியத்தில் சந்தித்த பிரியா வாரியர், தங்களது கேரள அணியின் ஜெர்ஸியை அவரிடம் வழங்கி உற்சாகமாக புகைப்படம் எடுத்துக்கொண்டார். அத்துடன் சச்சினை சந்தித்த அந்த அனுபவம் குறித்து ஒரு வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.