சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
நடிகர் கமல்ஹாசன் அரசியல் பயணத்தை துவக்கிவிட்டார். மதுரையில் நடந்த மாநாட்டில் கட்சியின் பெயரான, மக்கள் நீதி மய்யம் மற்றும் கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்தார்.
எனது கட்சி மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் செயல்படும். இந்த சோற்று பருக்கையை தொட்டு பார்க்க நினைப்பவர்கள் தொட்டுப்பாருங்கள். அது சுடும் . சோற்று பருக்கையை தொட்டு பார்த்தால் ஊழலில் தோய்ந்த உங்களின் கைகள் சுட்டுவிடும். மக்கள் தான் தலைவர்கள். நான் மக்களின் கருவி மட்டுமே தலைவன் அல்ல என்று பேசினார்.
இந்நிலையில், கமல் தனது கட்சியின் பெயரை அறிவித்ததில் இருந்து டுவிட்டரில், நம்பர் 1 இடத்தை பிடித்து டிரண்ட் ஆனது மக்கள் நீதி மய்யம். காலையில் இருந்தே கமல் தொடர்பான விஷயங்கள் தான் அதிகளவில் டிரண்ட்டிங்கில் இருந்தது. மாலையில் கட்சியின் பெயர் அறிவித்த பின்னர் சமூக வலைதளங்களில் அனைத்திலும் கமலும், அவரின் மக்கள் நீதி மய்யம் அதிகம் பகிரப்பட்டன.