சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
தமிழ் சினிமாவில் ஹாரர் பட சீசன் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. அதேசமயம், விவசாயிகள் பிரச்னைகளை மையமாகக்கொண்ட படங்கள் அதிகமாக தயாராகி வருகின்றன. அந்த வகையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கத்தி படத்தில் விவசாயிகள் பிரச்னையை மையமாகக் கொண்ட கதையில் நடித்தார் விஜய். அதையடுத்து இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மீண்டும் நடிக்கும் தனது 62வது படத்திலும் விவசாய பிரச்னையை முன்னிலைப்படுத்தி நடித்து வருகிறார் விஜய்.
அதேபோல் சுப்ரமணிய சிவா இயக்கத்தில் சமுத்திரகனி நடிக்கும் வெள்ளை யானை என்ற படமும் விவசாயி பிரச்னையை சொல்லும் கதையில் தயாராகி வருகிறது. இந்த படத்தில் சமுத்திரகனி விவசாயியாகவே நடித்து வருகிறார்.
ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடித்து வரும் பூமாரங் படம் ஆக்ஷ்ன் கதையில் உருவானாலும் அதில் விவசாயம் சம்பந்தமான ஒரு ஆழமான விஷயத்தை பதிவு செய்ய இருக்கிறார்களாம்.
இதுதவிர இன்னும் சில படங்கள் விவசாயம் சம்பந்தப்பட்ட கதையில் உருவாகிறது.