‛தளபதி கச்சேரி' பிளாஸ்ட் : ‛ஜனநாயகன்' முதல் பாடல் வெளியீடு | கோவா திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛அமரன்' | ஜெயிலர் 2 படத்தை பாலகிருஷ்ணா எதனால் நிராகரித்தார்? | சைபர் கிரைம் மோசடி - ருக்மணி வசந்த் எச்சரிக்கை செய்தி | 2026 பிப்ரவரியில் திரைக்கு வரும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு பாராட்டு விழா | உருவக்கேலியை ஏற்க முடியாது ; ஆதரித்தவர்களுக்கு நன்றி : கவுரி கஷன் அறிக்கை | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவை கதற வைத்த மோனிஷா உன்னி | ரிலீசுக்காக 5 வருடங்கள் காத்திருந்த படம் | லட்சுமி மேனன் மீதான ஆள்கடத்தல் வழக்கு தள்ளுபடி |

மலேசியாவில் நடக்கும் கலை நிகழ்ச்சிக்காக சென்னை தி.நகரில் உள்ள நடன இயக்குனர் ஸ்ரீதரின் ஸ்டூடியோவில் அமலாபால் ஒத்திகையில் ஈடுபட்டிருந்தபோது அங்கு வந்த தொழில் அதிபர் அழகேசன் என்பவர், அமலாபாலுக்கு பாலியல் ரீதியான டார்ச்சர் கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அமலாபால் மேற்கு மாம்பலம் போலீஸ் நிலையத்துக்கு நேரில் சென்று அவர் மீது புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் அழகேசன் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
அமலாபாலின் இந்த துணிச்சலான நடவடிக்கைக்கு தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர் விஷால் பாராட்டு தெரிவித்திருந்தார். இதற்கு தனது டுவிட்டரில் நன்றி தெரிவித்திருக்கிறார் அமலாபால். அதில், அவர் "நன்றி விஷால், இது ஒவ்வொரு பெண்ணின் கடமை. இதுபோல் பாலியல் ரீதியாக துன்புறுத்தும்போது அதை பெண்கள் சகித்துக் கொள்ளக்கூடாது. அதை எதிர்த்து போராட வேண்டும். அந்த நபர் (தொழிலதிபர் அழகேசன்) என்னை மாமிசத் துண்டைப்போல வியாபாரம் செய்ய நினைத்தார். அவர் அங்கு வந்ததும், இதுபோன்ற பேச்சும் எனக்கு கடும் எரிச்சலை தந்தது" என்று குறிப்பிட்டுள்ளார் அமலாபால்.