இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! | ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' |
மலேசியாவில் நடக்கும் கலை நிகழ்ச்சிக்காக சென்னை தி.நகரில் உள்ள நடன இயக்குனர் ஸ்ரீதரின் ஸ்டூடியோவில் அமலாபால் ஒத்திகையில் ஈடுபட்டிருந்தபோது அங்கு வந்த தொழில் அதிபர் அழகேசன் என்பவர், அமலாபாலுக்கு பாலியல் ரீதியான டார்ச்சர் கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அமலாபால் மேற்கு மாம்பலம் போலீஸ் நிலையத்துக்கு நேரில் சென்று அவர் மீது புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் அழகேசன் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
அமலாபாலின் இந்த துணிச்சலான நடவடிக்கைக்கு தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர் விஷால் பாராட்டு தெரிவித்திருந்தார். இதற்கு தனது டுவிட்டரில் நன்றி தெரிவித்திருக்கிறார் அமலாபால். அதில், அவர் "நன்றி விஷால், இது ஒவ்வொரு பெண்ணின் கடமை. இதுபோல் பாலியல் ரீதியாக துன்புறுத்தும்போது அதை பெண்கள் சகித்துக் கொள்ளக்கூடாது. அதை எதிர்த்து போராட வேண்டும். அந்த நபர் (தொழிலதிபர் அழகேசன்) என்னை மாமிசத் துண்டைப்போல வியாபாரம் செய்ய நினைத்தார். அவர் அங்கு வந்ததும், இதுபோன்ற பேச்சும் எனக்கு கடும் எரிச்சலை தந்தது" என்று குறிப்பிட்டுள்ளார் அமலாபால்.