ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கமர்ஷியல் சினிமாக்களில் இருந்து மாறுபட்டு மாற்று சினிமாவை கொடுக்கும் இயக்குநர்கள் வெகுசிலரே அதில் முக்கியமானவர் இயக்குநர் ராம். கற்றது தமிழ் படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ராம், சினிமாவிற்கு வந்த 10 ஆண்டுகளில் கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு என நான்கு படங்களை மட்டுமே இயக்கியுள்ளார். இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் பலராலும் பாராட்டை பெற்றுள்ளது.
இயக்கம் தவிர தங்கமீன்கள் படத்தின் மூலம் நடிகராகவும் தன்னை நிலைநிறுத்திய இயக்குநர் ராம், தற்போது சவரக்கத்தி படம் மூலம் நடிகராக களமிறங்குகிறார். அதுவும் தன்னைப்போன்று மாறுபட்ட சினிமாவை தரும் மிஷ்கின் உடன் இணைந்து நடித்துள்ளார். தனது சினிமா பயணம் பற்றியும், இப்படம் குறித்து நம்மோடு அவர் பகிர்ந்து கொண்ட விஷயங்களை பார்ப்போம்...
* உங்களது படங்களில் கதை அமையும் முறை?
கற்றது தமிழ் அடித்தட்டு மக்களின் வாழ்வியலை சொன்னது. தங்கமீன்கள் அப்பாவுக்கும் - மகளுக்குமான அன்பின் வெளிபாடு. அதில் கிராமத்து பள்ளிக்கூடம் ஒரு முக்கிய கதை சொன்னது. தரமணி, ஆண் - பெண் உறவு, அவர்களை சுற்றிய வாழ்க்கை முறையை பேசியது. பேரன்பு படம் நான் கேட்ட ஒரு உண்மை கதையை மையமாக வைத்து உருவாகி உள்ளது. இப்படி ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு கதை இருக்கிறது.
* உங்களை சினிமாவுக்குள் கொண்டு வந்தவர்கள்?
சின்ன வயதில் இருந்தே கதை பேசுவது பிடிக்கும், கதை எழுதுவது பிடிக்கும். ஒரு எழுத்தாளராகத்தான் ஆசைப்பட்டேன். ஆனால், இயக்குனராகிவிட்டேன். வெளிநாட்டு இயக்குநர்கள் நிறைய பேர் உள்ளார்கள். நம்நாட்டில், பாலுமகேந்திரா, எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத், மம்முட்டி இப்படி நிறைய பேர் உள்ளார்கள். எனக்கும் வயதாகி கொண்டே போகிறது. அதனால் நிறைய உதவி இயக்குனர்களிடம் இருந்தும் நான் கற்று வருகிறேன்.
* உங்கள் குடும்பம் ?
அப்பா திருநெல்வேலி, அம்மா மதுரை, அப்பா அரசாங்கத்தில் வேலை பார்த்ததால் பல ஊர்கள் சுற்றி வந்து விட்டேன். திருப்பூர், கோயம்பத்தூர் என பல ஊர்களை சொல்லலாம்.
* கதைக்காக நடிகர் தேர்வு செய்வீர்களா இல்லை நடிகருக்காக கதை எழுதுவீர்களா?
இந்த இரண்டையும் நான் செய்வது இல்லை. ஒரு படம் முடிந்த பிறகு அடுத்து என்ன கதை, எப்படி படம் பண்ணலாம் என்று யோசித்து தான் மற்றவர்களை முடிவு செய்கிறேன்
* சமீபத்திய இயக்குநர்களில் உங்களுக்கு நம்பிக்கை தந்தவர்கள்?
2000-மாவது ஆண்டில், நான், ஏழில், வெற்றிமாறன், வெங்கட்பிரபு போன்றவர்கள் வந்தோம். அதன்பிறகு அமீர் உள்ளிட் பலர் வந்தார்கள். பின் கொஞ்சம் இடைவெளி அமைந்தது. இப்போது சில இயக்குனர்கள் தரமான கதை கொண்டு வருகிறார்கள். காக்கா முட்டை மணிகண்டன், ஒரு கிடாயின் கருணை மனு அதிதி செங்கப்பா, அருவி அருண் புருசோத்தமன், குரங்கு பொம்மை நித்திலன், அட்டக்கத்தி ரஞ்சித், விக்னேஷ் சிவன் போன்றவர்களை சொல்லலாம். எனக்கு மிகவும் பிடித்த படம் த்ரிஷா இல்லனா நயன்தாரா. அப்டி ஒரு முடிவை தைரியமா வைத்த இயக்குனரை பாராட்டனும். பல விமர்சனங்கள் வந்தாலும் அந்த இயக்குனர் ஒரு நல்ல இடத்திற்கு வருவார் என்று நம்புறேன்.
* சினிமாவில் கற்றுக்கொண்டது?
வாழ்க்கையில் நான் கற்று கொள்ள நிறைய வாய்ப்பு சினிமாவில் இருக்கிறது. போலிதனங்கள் இல்லாமல் என்னையே நான் கேள்வி கேட்டுக்கொள்ள வாய்ப்பு. ஒவ்வொரு படம் முடியும் போதும் நான் கற்று கொண்டு கொள்வதாக நினைக்கிறன்
* தரமணியில் ஆண்ட்ரியாவை மனதில் வைத்து தான் கதை எழுதினிங்களா?
கதை பண்ணலாம் என்று நினைக்கும் போது இந்த கேரக்டர் இப்படி தான் இருப்பாங்க, அவங்க வாழக்கை பிரச்சனையில் இதெல்லாம் இருக்கு என்று முன்னாடியே சொல்லிட்விட்டேன். அவங்க ஓகே சொன்னால் இந்த கதை பண்ணுவோம் இல்லனா விட்டுடலாம் என்று நினைத்து, 10 நிமிடம் ஆண்ட்ரியாவிடம் கதை சொன்னேன். அவரும் கதையை புரிந்து கொண்டு நடிக்கிறேன் என்று சொன்னார். அதன்பின் தான் நான் அடுத்தக்கட்டத்திற்கு போனேன். ஆண்ட்ரியா வேண்டாம் என்று சொல்லியிருந்தால் தரமணி பண்ணியிருக்கவே மாட்டேன்.
* பேரன்புவில் மம்முட்டி எப்டி வந்தார்?
ஒரு சுயநலமிக்க மனிதன், எப்படி ஒரு பேரன்பு மிக்க மனிதனாக மாறுகிறான், அவன் வாழ்க்கை எப்படி மாறுகிறது, அவன் வாழக்கை பயணம் என்ன என்பதை ஒரு புத்தகம் போல் சொல்லும் படம் தான் பேரன்பு.
* நீங்களும் நடிகராகிவிட்டீர்கள், நடிப்பதற்கும், இயக்குவதற்கும் என்ன வித்யாசம் ?
என்னை கேட்டால் நடிப்பது ரொம்ப சுலபம். தெரியவில்லை என்றால் நாம கேள்வி கேட்கலாம். இயக்குனர் என்றால் நம்மகிட்ட கேள்வி கேட்பார்கள். இதில் பொறுப்பு அதிகம்.
* தொடர்ந்து நடிக்க வாய்ப்பு வருதா?
இயக்கம் தான் எப்போதும் என் முதல் சாய்ஸ். அப்பா ரோல் நிறைய வருகிறது. வீட்டு, வாடகை உள்ளிட்ட மற்ற சில செலவுகள் இருப்பதால் அதை சமாளிக்க படங்களில் நடிக்க வேண்டி இருக்கிறது. பிடித்த கதைகளில் நடிக்கிறேன்.
* நான்கு படம் இயக்கிய பிறகு கொஞ்சம் வருமானம் பார்த்து இருப்பீங்களே ?
இல்லையே. முதல் படத்துக்கு எவ்ளோ சம்பளம் கொடுத்துருபாங்க என்று நினைக்கிறீங்க? நான்கு படத்திற்கு பிறகு கொஞ்சம் கஷ்டம் இல்லை. அவ்வளவு தான். சாப்பாடு, வாடகை, ஸ்கூல் பீஸ், ஆபிஸ் வாடகை, உதவியாளர்கள் சம்பளம் என்று ஓரளவுக்கு சமாளிக்க முடிகிறது. அதே நாளைக்கு ஒரு மெடிக்கல் செலவு என்றால் என்னால் முடியாது. இனி தான் அதற்காக சம்பாதிக்கணும் சேமிக்கணும்.
* மிஸ்கினுடன் சேர்ந்து நடித்த அனுபவம்?
வழக்கமாக நாங்க எப்படி பேசிக் கொள்வோமோ அதைப்போல்தான் படப்பிடிப்பு தளமும் இருக்கும். சுதந்திரமாக வேலை பார்க்கலாம். இந்தபடத்தில் நான் முடி திருத்துபவராக நடிக்கிறேன். மூன்று நாட்கள் எப்படி முடி வெட்டுவது என்று பயற்சி கொடுத்தார்கள். வில்லனாக மிஷ்கின் நடித்துள்ளார். எனக்கு ஜோடியாக பூர்ணா, மூன்று குழந்தைகளுக்கு தாயாக நடித்துள்ளார். படம் நல்ல காமெடியாக இருக்கும்.