ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கியூப் உள்ளிட்ட டிஜிட்டல் சேவை பிரச்னை தொடர்பாக மார்ச் 1 முதல் படங்கள் வெளியீடு இல்லை என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது...
தொடர்ந்து பல வருடமாக நடைமுறையில் இருந்து வரும் மிக அதிகப்படியான கட்டணத்தினை குறைக்க வேண்டி பலமுறை நேரிலும், கடிதம் மூலமாகவும் தொடர்பு கொண்டு கேட்டும், கொஞ்சமும் செவிசாய்க்காத DSP எனப்படும் டிஜிட்டல் சேவை வழங்குனர்களுக்கு எதிராக ஆந்திரா, தெலுங்கனா, கர்நாடகா, மற்றும் கேரளாவைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர், வருகிற மார்ச் 1-ம் தேதி முதல் திரைப்படங்களை திரையிடப் போவதில்லை என ஏகமனதாக முடிவெடுத்து அறிவித்துள்ளார்கள்.
பிப்ரவரி 1-ம் தேதி இந்த பிரச்சினை தொடர்பாக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் நடந்த கூட்டத்தில் இது பிரச்னை சம்பந்தமாக விவாதிக்கப்பட்டது. இதில், டிஜிட்டல் சேவை வழங்குனர்களுக்கு எதிராக மற்ற மாநில தயாரிப்பாளர் சங்கங்களின் போராட்டத்தில் இணைந்து, அதற்கு ஆதரவு தருவது என முடிவு செய்யப்பட்டது. எனவே, மார்ச் 1-ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் எந்த ஒரு திரைப்படத்தையும் வெளியிடுவதில்லை என தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஏகமனதாக முடிவெடுத்துள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.