Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

“தமிழுக்கு இந்த வருட தேசிய விருது மம்முட்டி மூலம் வரும்” : சரத்குமார்..!

02 பிப், 2018 - 02:32 IST
எழுத்தின் அளவு:
sarathkumar-praises-mammooty

இயக்குனர் ராம் டைரக்சனில் மம்முட்டி நடித்துள்ள படம் 'பேரன்பு'. சமீபத்தில் ராட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டபோது அந்தப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு பற்றி தான் கடந்த சில தினங்களாக சோஷியல் மீடியாவில் செய்திகள் நிரம்பி வழிகின்றன.

பழசிராஜா படத்தை தொடர்ந்து மம்முட்டியுடன் மீண்டும் இந்தப்படத்தில் இணைந்து முக்கிய வேடத்தில் நடித்துள்ள நடிகர் சரத்குமார், இந்தப்படம் குறித்தும் அதில் மம்முட்டியின் நடிப்பு குறித்தும் பாராட்டியுள்ளார்..


“இந்த கதையை ராம் என்னிடம் சொன்னபோது மம்முட்டியின் 'அமுதன்' கேரக்டரை பற்றி விவரித்தார். அதை கேட்டதும் இந்த கேரக்டரை மம்முட்டியால் மட்டுமே செய்யமுடியும் என அப்போதே அவரிடம் சொன்னேன். நிச்சயம் இந்தப்படம் மூலம் இந்த வருட தேசிய விருது தமிழ் சினிமாவுக்கு, அதுவும் மம்முட்டியால் கிடைக்கும் என உறுதியாக சொல்வேன்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார் சரத்குமார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)