ஹிந்தியில் அறிமுகமாகும் பஹத் பாசில் | ராம், மிரிச்சி சிவா படத்தின் டப்பிங் பணி தொடங்கியது | சீமான், சிவகார்த்திகேயன் சந்திப்பு பின்னனி என்ன? | கண்டதற்கு எல்லாம் பொங்கும் போராளி நடிகர்கள் கள்ளச்சாராய சாவில் ‛கள்ள மவுனம்' ஏன்? | கள்ளக்குறிச்சி சென்ற விஜய் : பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் | அந்த நடிகையின் சாயலில் இருந்ததால்தான் பாலிவுட் பட வாய்ப்பே கிடைத்தது : டாப்ஸி | வில்லன் ரோலை விரும்பும் கமல் | கள்ளச்சாராயம், போதை பொருளை ஒழிக்க வேண்டும் : விஷால் | கள்ளச்சாராய வியாபாரிகளை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : கமல் | தனுஷை இயக்கும் போர் தொழில் இயக்குனர் விக்னேஷ் ராஜா |
வெங்கட் பிரபு இயக்கும் கோட் படத்தில் நடித்து வருகிறார் விஜய். அவருடன் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா உள்ளிட்ட பலரும் நடித்து வந்த கோட் படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. கடந்த பல மாதங்களாக சென்னை, கேரளா, ரஷ்யா உள்ளிட்ட இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்து வந்தது. படத்தின் முதல் பாடல் ஏற்கனவே வெளியான நிலையில், ரஷ்யாவில் நடைபெற்ற இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கு பிறகு அமெரிக்காவில் கிராபிக்ஸ் பணிகள் தொடங்கின. அங்குள்ள லேஸ் வேகாசில் விஜய் சம்பந்தப்பட்ட கிராபிக்ஸ் காட்சிகள் படமாகி வந்தன. இந்நிலையில் அங்குள்ள பணிகள் முடிவடைந்ததை அடுத்து நேற்று இரவு விஜய் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பி உள்ளார். அடுத்து கோட் படத்திற்கான டப்பிங் பணியில் விஜய் ஈடுபட இருப்பதாக கூறுகிறார்கள்.