ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகை நயன்தராவுக்கு கடந்த ஆண்டு மிகச் சிறப்பான ஆண்டாக அமைந்தது. வேலைக்காரன், ஜெய் சிம்ஹா என்ற இரண்டு பெரிய படத்தில் நடித்தாலும் அவர் சோலோவாக நடித்த டோரா, அறம் படங்கள் அவருக்கு நல்ல ஓப்பனிங் உள்ள நடிகை என்ற பெயரை கொடுத்தது. அறம் படம் அவருக்கு சிறந்த நடிகைக்கான விருதுகளையும், நல்ல வசூலையும் கொடுத்தது.
அதேப்போல அவர் காதலிக்கும் இளம் இயக்குனருடன் எந்த பிரச்னையும் இல்லாமல் வாழ்க்கை சந்தோஷமாக போய்க்கொண்டிருக்கிறது. பிறந்த நாளையும், புத்தாண்டையும் அவர் காதலுடன் வெளிநாட்டில் மகிழ்ச்சியாக கொண்டாடிக் கொண்டாடினார். விரைவில் திருமணமும் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலுக்கு சென்ற நயன்தாரா அப்போது சில வேண்டுதல்கள் வைத்ததாகவும் அவைகள் நிறைவேறியதால் நேர்த்தி கடன் தீர்க்க அவர் சென்றதாகவும் கூறப்படுகிறது. கிறிஸ்தவ மதத்தவரான நயன்தாரா, பிரபு தேவாவை காதலித்தபோது இந்து மதத்திற்கு மாறினார். பிரபுதேவாவுடனான காதல் முறிந்த பிறகும் இந்துவாகவே தொடருகிறார்.