ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு, சரண்யா மோகன் நடிப்பில் 2009 ஜனவரி 29-ஆம் தேதி வெளியான படம் 'வெண்ணிலா கபடிக்குழு'. இந்த படம் வெளியாகி இன்றோடு ஒன்பது வருடங்கள் நிறைவடைந்துள்ளது.
இந்தப் படத்தை தொடர்ந்து கார்த்தி, விக்ரம் உட்பட பல முன்னணி ஹீரோக்களை வைத்து படங்களை இயக்கிய சுசீந்திரன், தற்போது 'சுட்டுப் பிடிக்க உத்தரவு' என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகவிருக்கிறார். இந்த படத்தை ராம்பிரகாஷ் ராயப்பா இயக்குகிறார். இவர் 'தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்', 'போக்கிரி ராஜா' ஆகிய படங்களை இயக்கியவர்.
இந்த படத்தில் நடிக்கவிருப்பது குறித்து இயக்குனர் சுசீந்திரன் தன் மன உணர்வுகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார். ''என்னுடைய வாழ்நாளில் நான் மறக்க முடியாத நாள் இது... என்னுடைய முதல் படம் 'வெண்ணிலா கபடிக்குழு' 2009 ஜனவரி 29-ஆம் தேதி ரிலீசானது. இன்றுடன் 9 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இன்று மீண்டும் ஒரு பயணம். அதே ஜனவரி 29... ஒரு நடிகனாக என்னுடைய முதல் நாள் படப்பிடிப்பு இன்று... 'சுட்டுப் பிடிக்க உத்தரவு' ஆரம்பம். இயக்குனர் ராம்பிரகாஷ் அவர்களுக்கும், தயாரிப்பாளர் மோகன் அவர்களுக்கும் நன்றி'' என்று அதில் குறிப்பிட்டுள்ளார் சுசீந்திரன்!
இந்த படத்தில் சுசீந்திரனுடன் இயக்குநர் மிஷ்கின், விக்ராந்த் ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.