ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
1996-ல் ஷங்கர் இயக்கத்தில் கமல் இரண்டு வேடங்களில் நடித்த படம் இந்தியன். இந்த படத்தில் லஞ்சத்துக்கு எதிரான வேடத்தில் இந்தியன் தாத்தாவாக கமல் நடித்திருந்த வேடம் பெரிதாக பேசப்பட்டது. இந்த நிலையில், 21வருடங்களுக்குப்பிறகு தற்போது மீண்டும் கமல்-ஷங்கர் கூட்டணியில் இந்தியன்-2படம் தயாராகிறது. இதுகுறித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேபோதே உறுதிப்படுத்தி விட்டார் கமல். தற்போது ரஜினி நடித்துள்ள 2.ஓ படத்தின் இறுதிகட்ட பணிகளில் ஷங்கர் பிசியாக இருந்து வருவதால், இந்தியன்-2படம் எப்போது ஆரம்பிக்க உள்ளது என்பது குறித்த தகவல்கள் உறுதிப்படுத்தப்படாமல் இந்து வருகிறது.
ஆனால், இந்தியாவின் 69வது குடியரசு தினமான ஜனவரி 26-ந்தேதி இந்தியன்-2படத்தின் தொடக்க விழா தைவான் நாட்டில் நடந்திருப்பதாக ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அதற்காக 2.ஓ படத்தின் கிபிராக்ஸ் வேலைகளுக்காக லாஸ் ஏஞ்சல்ஸில் முகாமிட்டுள்ள ஷங்கர் அங்கிருந்து தைவான் சென்றிருக்கிறார். கமல் உள்பட படத்தின் முக்கிய டெக்னீசியன்கள் அனைவரும் கலந்து கொண்டார்களாம். அப்போது இந்தியன்-2பலூன் வானத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.
மேலும், இந்தியன்-2படத்தின் துவக்க விழா தைவானில் நடிப்பதற்கு காரணம் உள்ளது. அதாவது இந்த படம் இந்திய தேசிய ராணுவத்தை நிறு விய சுபாஷ் சந்திர போஸ் கதையில் உருவாகிறதாம். அதோடு, சுபாஷ் சந்திர போஸ் 1945ல் தைவான் விமான விபத்தில் இறந்து விட்டதாக கூறப்படுவதால், தைவானில் இந்தியன்-2படம் தொடங்கப்பட்டுள்ளதாம். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. அதோடு, இந்த படத்தில் ஏ.ஆர்.ரகுமானுக்குப் பதிலாக அனிருத் இசையமைப்பதாகவும் கூறப்படுகிறது.