ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோனே நடித்த, பத்மாவதி திரைப்படத்தில், வரலாற்று நிகழ்வுகள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி, ராஜஸ்தான், ம.பி., மாநிலங்களைச் சேர்ந்த, ராஜபுத்ர சமூகத்தினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
பல மாநிலங்களில் வன்முறை பரவியது. ம.பி., குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில், இந்த படத்துக்கு தடை விதிக்கப்பட்டது. பின், படத்தின் பெயரை, பத்மாவத் என மாற்றி, சில காட்சிகளை நீக்கி, படத்தை வெளியிட, அனுமதி வழங்கப்பட்டது. இப்படத்துக்கு, சில மாநிலங்களில் விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து, திரைப்பட தயாரிப்பாளர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
மனுவை பரிசீலித்த நீதிபதிகள், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில், படத்தை திரையிட விதிக்கப்பட்ட தடைக்கு, இடைக்கால தடை விதித்தனர். இதை எதிர்த்து, ம.பி., ராஜஸ்தான் மாநில அரசுகள், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளன. அந்த மனுவில், பத்மாவத் திரைப்படத்தை திரையிட அனுமதிக்கப்பட்ட உத்தரவில் திருத்தம் செய்யும்படி கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை இன்று தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. படத்தை மறு ஆய்வு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என்று மனுவை தள்ளுபடி செய்தனர். இதனால் பத்மாவத் படம், எந்த தடையுமின்றி இந்தியா முழுக்க ரிலீஸாகிறது.
அதேசமயம், ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களில் இப்படத்தை திரையிட தொடர்ந்து எதிர்ப்பு குரல் வந்து கொண்டு இருக்கிறது. சில இடங்களில் தியேட்டர்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இதனால் பத்மாவத் படம் ரிலீஸாகும் தியேட்டர்களில் பலத்த பாதுகாப்பு கொடுக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.