ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் மாற்றம் வரும் என நடிகர் விஷால் கூறினார். ஆங்கில டிவி., சேனல் சார்பில் கருத்தரங்கு நடந்தது. இதில் விஷால் பங்கேற்று பேசியதாவது...
ரஜினி, கமல் ஆகியோருக்கு அரசியலுக்கு தாமதமாக வந்தாலும் அவர்களின் முடிவு சரியானதாக தெரிகிறது. இருவரும் களத்தில் இருப்பதால் மக்கள் யாருக்கு ஓட்டளிப்பார்கள் என்று கணிக்க முடியாது. ஆனால், வரும் சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் நிச்சயம் மிகப்பெரிய மாற்றம் வரும் என்பது மட்டும் உறுதி.
ஆர்.கே.நகர் தேர்தலில் எனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது ஜனநாயக படுகொலை, ஆனால் அதுவே என்னை வலிமையாக்கி உள்ளது. அரசியல்வாதிகள் நடிகர்களாக இருக்கும்போது, நடிகர்கள் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது.
இவ்வாறு விஷால் கூறினார்.