ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் நயன்தாரா தொடர்ந்து நம்பர்-1 ஹீரோயினாக வலம் வருகிறார். 2017-ம் ஆண்டில், இவர் நடித்து வெளியான அறம் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பாராட்டும் படி இருந்தது. அதோடு நயன்தாராவிற்கு இப்படத்தினால் ஏகப்பட்ட பாராட்டுகள் குவிந்தன. இந்நிலையில் புத்தாண்டையொட்டி ரசிகர்களுக்கு தன் கைப்பட எழுதிய வாழ்த்து செய்தியை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது...
என் வாழ்வை அர்த்தம் உள்ளதாக்கிய ரசிகர்களுக்கு நன்றி மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள். உங்கள் அன்பால் நான் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணருகிறேன். உங்களின் அன்பு, என் வாழ்க்கையை அழகாக்கி உள்ளது.
உழைப்பை முன்னெடுத்து, மற்றவைகளை ஆண்டவனிடம் விட்டுவிட வேண்டும் என்பதை உங்களின் அன்பால் புரிந்து கொண்டேன். உங்களின் அன்பால் பொழுபோக்கான படங்களை மட்டுமல்லாது அறம் மாதிரியான நல்ல படங்களையும் என்னால் கொடுக்க முடிந்தது.
எனக்கு ஆதரவளித்த மீடியாக்கள், சமூகவலைதளங்கள், விமர்சகர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட எல்லோருக்கு நன்றி. உங்கள் இதயத்தில் எனக்கும் சின்னதாய் ஓர் இடம் கொடுத்ததற்கு நன்றி. 2018-ம் ஆண்டு அனைவருக்கும் சிறப்பாக இருக்கும். எப்போதும் நேர்மறையாகவே சிந்தியுங்கள்.
இவ்வாறு நயன்தாரா கூறியுள்ளார்.