சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
நடிகர் கார்த்தியின் மக்கள் நல மன்ற திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் ஜீவன்குமார் (வயது27) கார் விபத்தில் பலியானார்.
ஜீவன் குமார், தன் நண்பர்கள் தினேஷ், நாகராஜ் ஆகியோருடன் சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். கார்த்தி என்பவர் காரை ஓட்டினார். தாம்பரம் இரும்புலியூர் மேம்பாலத்தில் கார் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு கீழே பாய்ந்தது. பலத்த காயம் அடைந்த நான்குபேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் ஜீவன்குமார், தினேஷ் இருவரும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர்.
தன் ரசிகர் மன்ற நிர்வாகி விபத்தில் பலியான சம்பவத்தை கேட்ட கார்த்தி, ஜீவன் குமாரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதோடு, கதறி அழுதார். தொடர்ந்து அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய கார்த்தி, "தயவு செய்து நள்ளிரவு பயணத்தை தவிர்த்து விடுங்கள். தலைப்போகும் வேலையாக இருந்தாலும் இரவில் தூங்கிவிட்டு பகலில் பயணம் செய்யுங்கள். பயணத்தை விட உயிர் மிக முக்கியம்" என உருக்கமான வேண்டுகோள் வைத்தார்.
விபத்தில் ஜீவன் குமாருக்கு திருமணமாகி மூன்று மாதம் தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.