சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
நடிகர் சசிக்குமாரின் உறவினர் அசோக்குமார் தற்கொலை செய்த வழக்கில், அவரை தற்கொலைக்கு தூண்டியதாக சினிமா பைனான்சியர் அன்புசெழியன் மீது வழக்குப்பதிவு செய்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து அவர் தலைமறைவாகியுள்ளார். மேலும் முன்ஜாமின் கோரியும் மனு தாக்கல் செய்தார். பின்னர் அதை வாபஸ் பெற்றார்.
இந்நிலையில் தன் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் அன்புச்செழியன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தனக்கும், அசோக்குமாருக்கும் எந்த பணபரிவர்த்தனையும் கிடையாது என்றும், சசிகுமாருடன் மட்டும் தனக்கு பணபரிவர்த்தனை உள்ளது. தன் மீது தொடரப்பட்ட வழக்கு உள்நோக்கம் கொண்டது என தன் மனுவில் அன்புச்செழியன் கூறியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இதனை விசாரித்த சென்னை ஐகோர்ட், அன்புசெழியன் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்ததுடன், இது குறித்து ஜனவரி 29க்குள் பதிலளிக்க சசிக்குமாருக்கு உத்தரவிட்டுள்ளது.