சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
விஷால் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளராக பதவியேற்ற பிறகு பண மோசடியில் ஈடுபட்ட முன்னாள் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார். இதை எதிர்த்து முன்னாள் செயலாளர் ராதாரவி உள்ளிட்ட முன்னாள் நிர்வாகிகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் ஆஜரான விஷால் தரப்பு "வழக்கு முடியும் வரை முன்னாள் நிர்வாகிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம்" என்று உறுதி அளித்தனர்.
ஆனால் உறுதிமொழிக்கு மாறாக ராதாரவி உள்ளிட்ட சில முன்னாள் நிர்வாகிகளை புதிய நிர்வாகம் நீக்கியது. இதை தொடர்ந்து விஷால் மீது ராதாரவி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வருகிற 19ம் தேதிக்குள் விஷால் கோர்ட்டில் நேரில் ஆஜராகி இதற்கு விளக்கம் அளிக்க உத்தரவிட்டார்.