சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பாகுபலி-2 படத்தை அடுத்து ஒரு மல்டி ஹீரோ கதையை படமாக்குகிறார் ராஜமவுலி. இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிப்பது உறுதியாகியிருக்கிறது. பாலிவுட் வியாபாரத்தை கருத்தில் கொண்டு ஹிந்தி நடிகர்களையும் இந்த படத்தில் நடிக்க வைக்க எண்ணியுள்ளார்.
தனது புதிய படம் குறித்து ராஜமவுலி அளித்துள்ள ஒரு பேட்டியில், இப்போதெல்லாம் ரசிகர்கள் தாங்கள் படம் பார்க்க டிக்கெட்டிற்கு கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு மரியாதை இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதாவது ஸ்டார் வேல்யூ கொண்ட நடிகர்கள் - டைரக்டர்கள் என்பதை விட நல்ல படங்களை எதிர்பார்க்கிறார்கள்.
பாகுபலி-2விற்கு பிறகு எனது படங்களுக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதனால், அடுத்தபடியாக அழுத்தமான ஒரு கதையில், ரசிகர்கள் டிக்கெட்டிற்காக கொடுக்கும் பணத்தின் வேல்யூவை புரிந்து படத்தை இயக்கப்போகிறேன் என்று கூறியுள்ளார் ராஜமவுலி.