சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
எஸ்-3 படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. கார்த்தி, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், செந்தில் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அவர் இசையில் உருவான சொடக்கு மேல சொடக்கு போடுது பாடல் சூப்பர் ஹிட்டாகி படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும், இந்த தானா சேர்ந்த கூட்டம் படம் தெலுங்கில் கேங் என்ற பெயரில் வெளியாகிறது. இந்த படத்தை அடுத்து செல்வராகவன் இயக்கும் படத்தில் சூர்யா நடிப்பதாக கூறப்படும் நிலையில், தற்போது அவர் சில புதுவரவு இயக்குனர்களிடமும் கதை கேட்டு வருகிறார். அதில் சந்தீப்கிஷன் நடித்த மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் சொன்ன கதை சூர்யாவை இம்ப்ரஸ் பண்ணியுள்ளதாம். அதையடுத்து அவரது இயக்கத்தில் சூர்யா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.