சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தமிழ்த் திரையுலகத்தில் தற்போது இளம் வில்லன்களுக்கான பஞ்சம் அதிகமாகிவிட்டது. எல்லாருக்குமே நாயகனாக மட்டுமே நடிக்க ஆசை. ஒரு முறை வில்லனாக நடித்துவிட்டால் தொடர்ந்து வில்லனாக மட்டுமே நடிக்க அழைப்பார்களோ என்று தயக்கம். இருந்தாலும் ஒரு சிலர் மட்டுமே அதையெல்லாம் பார்க்காமல் கிடைக்கும் நல்ல வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
அந்த விதத்தில் பிரசன்னா தற்போது தொடர்ந்து வில்லனாக நடிக்க முடிவெடுத்துவிட்டார் போலிருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பே மிஷ்கின் இயக்கிய 'அஞ்சாதே' படத்தில் நரேனுக்கு எதிராக வில்லனாக நடித்தவர் இப்போதும் நடிக்க மாட்டாரா என்ன?.
'திருட்டுப் பயலே 2' படத்தில் வில்லனாக நடித்த பிரசன்னா, திரையில் அந்தக் கதாபாத்திரத்தின் தன்மையை அப்படியே வெளிப்படுத்திவிட்டார் என பலரும் பாராட்டி வருகிறார்கள். தமிழில் 'திருட்டுப் பயலே' என்றால் அதே தினத்தில் தெலுங்கிலும் வில்லனாக நடித்த 'ஜவான்' படமும் வெளியானது. ஒரே நாளில் இரண்டு மொழிகளில் வில்லனாக நடித்த படங்கள் அவரை ரசிகர்களிடம் சரியாகக் கொண்டு போய் சேர்த்துள்ளன. தொடர்ந்து வில்லனாக நடித்தால் பிரகாஷ்ராஜ் போல பல ஆண்டுகள் நிலைத்து நிற்கலாம். ஆனாலும், பிரசன்னா அப்படித் தொடர்வாரா என்பது சந்தேகம்தான்.