சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
இன்றைக்கு சின்னத்திரை சீரியல்கள் மிகவும் பிரபலம், ராதிகா, குஷ்பு, ரம்யா கிருஷ்ணன், தேவயானி என சினிமாவில் முன்னணியில் இருந்த நடிகைகள் சீரியல் நாயகியாக நடித்தார்கள், நடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் முதல் சீரியல் ஹீரோயின் கமலா காமெஷ் என்பது பலருக்கும் ஆச்சர்யம் தரும் செய்தியாக இருக்கும். ஆனால் அதுதான் உண்மை.
முதலில் கமலா காமேஷ் பற்றி பார்ப்போம். சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த கமலா காமேஷ். அப்போது மேடை கச்சேரி நடத்துவதில் புகழ்பெற்ற காமேஷின் மனைவி. கணவரின் இசை நிகழ்ச்சியல் பாடிக் கொண்டிருந்தவர் கணவரின் நண்பர் ஜெயபாரதி இயக்கிய குடிசை படத்தில் குப்பத்து பெண்ணாக நடித்தார். அதன் பிறகு விசு நடத்திய நாடகங்களில் நடித்த கமலா கமேஷ், பாரதிராஜாவின் கண்களில் பட்டு அலைகள் ஓய்வதில்லை படத்தில் கார்த்தியின் அம்மாவாக நடித்தார். அதன் பிறகு தென்னந்திய மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் அம்மாவாக நடித்து விட்டார்.
அதற்கு முன்னதாக தூர்தர்சன் பொதிகை தொலைக்காட்சி கருப்பு வெள்ளையில் இருந்து கலருக்கு மாறிய பிறகு தொடர்களை தயாரித்து ஒளிபரப்ப ஆரம்பித்தது. தூர்தர்ஷனில் ஒளிபரப்பான முதல் தொடரான ஒரு மீனின் கண்ணீர் என்ற தொடரின் நாயகி கமலா காமேஷ்.