சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
'காற்று வெளியிடை' படத் தோல்விக்குப் பிறகு மணிரத்னம் அடுத்து இயக்க உள்ள படத்தில் ஜோதிகா, சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளார்கள். இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களிலேயே பலர் நடிப்பதால் ஒருவர் சரியாக படப்பிடிப்புக்கு வரவில்லை என்றால் கூட படத்தைத் திட்டமிட்டபடி முடிக்க முடியாது.
மணிரத்னம் படத்தில் சிம்பு நடிக்கிறார் என்றதுமே பலரும் ஆச்சரியப்பட்டார்கள். சிம்பு அவருடைய அப்பா தயாரித்த படப்பிடிப்புக்கே சரியாகப் போக மாட்டார். அவரை நம்பி எப்படி மணிரத்னம் அவருடைய படத்தில் ஒப்பந்தம் செய்தார் என்றெல்லாம் கோலிவுட்டில் கேள்விகள் எழுந்தன. அதனால் மணிரத்னம் ஒப்பந்தம் போடும் போதே படப்பிடிப்புக்கு சொன்னபடி சரியான நேரத்தில் வர வேண்டும் என்ற ஒரு கண்டிஷனை சேர்த்திருக்கிறாராம்.