சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தமிழ் சினிமாவின் பிரபல ஒளிப்பதிவாளர் ப்ரியன் மாரடைப்பால் திடீரென மரணமடைந்தார். இவருக்கு வயது 55.
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ப்ரியன், சின்ன வயதிலேயே சினிமாவின் மீது ஆசை கொண்டு ஒளிப்பதிவாளரானவர். ஆரம்பத்தில் பாலுமகேந்திராவிடம் பல படங்களில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர், பின்னர் தொட்டாச்சிணுங்கி படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். தொடர்ந்து பொற்காலம், தேசிய கொடி, தெனாலி போன்ற பல படங்களுக்கும், கமல், விஜய், அஜித், சூர்யா, விஷால், சிம்பு என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இயக்குநர் ஹரியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் ப்ரியன் தான். ஹரி இயக்கிய முதல் படமான "தமிழ்" முதல் தற்போது இயக்கி வரும் "சாமி 2" வரை அனைத்து படங்களுக்கும் ப்ரியன் தான் ஒளிப்பதிவாளர். இடையில் "வேங்கை" படத்திற்கு மட்டும் ப்ரியன் ஒளிப்பதிவு செய்யவில்லை.
சென்னை, கேகே.நகரில் வசித்து வந்த ப்ரியன், வளசரவாக்கத்தில் சொந்தமாக வீடு கட்டி வருகிறார். இதற்கான வாசல் கதவு அமைக்கும் நிகழ்வு இன்று(நவ., 9) நடந்தது. இதை முடித்து விட்டு வீடு திரும்பியவர், நெஞ்சுவலிப்பதாக கூறியுள்ளார். அப்படியே மாரடைப்பு ஏற்பட வீட்டிலேயே அவரது உயிர் பிரிந்தது.
ப்ரியனின் திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. அவரது சொந்த ஊரான விருதுநகரில் நாளை(நவ., 10) இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.