சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை (பிலிம் சேம்பர்) தலைவர் எல்.சுரேஷ், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு நேற்று ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தின் சாரம்சம் வருமாறு:
தீபாவளிக்கு வெளி வந்த மெர்சல் படத்துக்கு ஏற்படுத்தப்பட்ட பிரச்னைகள் வருத்தமளிப்பதாக உள்ளது. ஒரு திரைப்படம் தணிக்கை குழுவால் தணிக்கை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்ட பிறகு அதில் மாற்றம் செய்ய யாருக்கும் அதிகாரம் இல்லை.
ஒரு படத்தை இணையத்தில் பதிவேற்றம் செய்வதோ, பதிவிறக்கம் செய்து பார்ப்பதோ சட்டப்படி குற்றமாகும். இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா, மெர்சல் படத்தை இணையதளத்தில் பார்த்ததாக சொல்லியிருக்கிறார்.
ஒரு முன்னணி அரசியல் கட்சியின் தலைவரே தவறான முறையில் சட்டவிரோதமாக பார்த்திருக்கிறார். இதைக்கண்டு திரைத்துறை வெட்கப்படுகிறது, கவலைப்படுகிறது. பைரசி தடுப்பு சட்டத்தின்படி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.