சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
விஜய் நடிப்பில் தற்போது வெளிவந்துள்ள மெர்சல் படம், பல்வேறு சர்ச்சைகளை உண்டாக்கி இருக்கிறது. குறிப்பாக படத்தின் கிளைமாக்சில் ஜிஎஸ்டி வரி தொடர்பான வசனங்கள் மத்திய மாநில அரசுகளை கோபப்படுத்தி உள்ளது. மத்திய, மாநில அமைச்சர்கள் நேரடியாகவே அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்று கூறிவருகிறார்கள். இது குறித்து படத்துக்கு சான்றிதழ் வழங்கிய சென்னை மண்டல தணிக்கை அதிகாரி மதியழகன் கூறியிருப்பதாவது:
மெர்சல் படத்தில் யாரையும் பாதிக்கிற வகையிலோ, சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலோ வசனங்கள் இல்லை. கருத்துரிமை அடிப்படையிலேயே ஜிஎஸ்டி வரி தொடர்பான காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. படத்தில் காட்சிகளை நீக்க வேண்டும் என்றால் அதற்கு தணிக்கை குழுவிடம் மீண்டும் அனுமதி பெற வேண்டும் என்கிறார் மதியழகன்.