சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தமிழ்நாட்டை சேர்ந்த சமந்தா, ஆந்திராவின் புகழ்பெற்ற சினிமா குடும்பமான அக்னிநேனி நாகேஸ்வராவ் குடும்பத்தின் மருமகளாகிவிட்டார். நாகசைதன்யா, சமந்தா திருமணம் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவாவில் கோலாகலமாக நடந்தது. இந்த மணநாளில் மணமேடையில் சமந்தா கண்ணீர்விட்டு அழுதார். இது பலருக்கு அதிர்ச்சியாக இருந்தது. தற்போது தான் மணமேடையில் அழுதது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அது வருமாறு:
நான் சினிமாவில் நடிக்க வந்தபோது பணம் இல்லாமல் கஷ்டப்பட்டேன். நான் நடித்த படங்கள் வெற்றி பெற்ற பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தன. பணமும் சேர்ந்தது. சில தவறுகள் செய்து இருக்கிறேன். பிறகு அதை சரிசெய்து விட்டேன். மற்றவர்களுக்கு உதவி இருக்கிறேன். இவையெல்லாமே நாக சைதன்யாவுக்கு தெரியும். இப்படி என் வாழ்க்கையை முழுமையாக தெரிந்த ஒருவர் கணவராக அமைந்ததை நினைத்து தான் மணமேடையில் அழுதேன்.
திருமணத்துக்கு பிறகு நடிக்க கூடாது என்று கணவர் குடும்பத்தில் யாரும் வற்புறுத்தவில்லை. தொடர்ந்து நடிக்கும்படி சுதந்திரம் கொடுத்து இருக்கிறார்கள். திருமணமான நடிகைகளாலும் நன்றாக நடித்து மார்க்கெட்டை தக்க வைக்க முடியும் என்று நிரூபிப்பேன். கவர்ச்சியாக இல்லாமல் கவுரவமான வேடங்களில் நடிப்பேன்.
இவ்வாறு சமந்தா கூறியுள்ளார்.