சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
சாஹசம் படத்திற்கு பிறகு பிரஷாந்த் நடிக்கும் படம் ஜானி. பிரஷாந்தின் தந்தை தியாகராஜன் ஸ்டார் மூவீஸ் சார்பில் தயாரிக்கிறார். பத்திரிக்கையாளர் வெற்றிச்செல்வன் இயக்குகிறார். பிரஷாந்துடன் சஞ்சிதா ஷெட்டி, பிரபு, கலைராணி, ஆனந்தராஜ் உள்பட பலர் நடிக்கிறார்கள். படத்தில் நடித்திருப்பது பற்றி பிரஷாந்த் கூறியதாவது:
இதுவரை நான் நடித்திராத ஒரு வித்தியாசமான கேரக்டரில் நடித்திருக்கிறேன். நான் மட்டுமல்ல மற்றவர்களுக்கும் அப்படித்தான். பிரபு, இதற்கு முன் நடித்திராத ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார். வசன காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும் பாடல் காட்சிகள் மட்டும் பாக்கி இருக்கிறது. 17 ஷெட்டுகள் போட்டு படமாக்கப்பட்டது. இது ஆக்ஷ்ன் த்ரில்லர் படம். ஹாலிவுட் தரத்திற்கு இருக்கும்.
பிரபு சாருடன் நடிக்கும்போது மிகவும் பயத்துடன் தான் நடித்தேன். கேமராவுக்கு பின்னால் கலகலவென பேசிக் கொண்டும், ஜோக் அடித்துக் கொண்டும் இருப்பார். கேமராவுக்கு முன்னால் அப்படியே கேரக்டராக மாறிவிடுவார். ஒவ்வொரு காட்சியிலும் அவர் தான் முன்னால் நிற்பார். அவருக்கு சமமாக நிற்க வேண்டும் என்பதற்காக அவரையே போட்டியாக நினைத்துக் கொண்டு நடித்தேன். நன்றாக நடித்தபோதெல்லாம் முதுகில் தட்டிக் கொடுத்து பாராட்டுவார். சஞ்சிதா ஷெட்டிக்கு இந்தப் படம் ஒரு திருப்பமாக இருக்கும். என்றார் பிரசாந்த்.