சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வருகிறவர் பாவனா. கன்னடப் படங்களில் நடித்தபோது கன்னட தயாரிப்பாளர் நவீன் என்பவருடன் காதல் ஏற்பட்டது. பல ஆண்டுகள் காதலை மறுத்து வந்தவர் பின்னர் அதனை வெளிப்படையாக தெரிவித்தார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது வாழ்க்கையில் சில அசம்பாவித சம்பவம் ஒன்று நடந்தது. அந்த சம்பவத்திற்கு பிறகும் பாவனாவை விட்டு விலகாமல் இருந்தார் நவீன். மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த பாவனாவை சகஜ நிலைக்கு கொண்டு வந்ததில் நவீனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பெரும் பங்கு இருந்தது.
பாவனாவுக்கு ஆதரவாக இருக்கும் பொருட்டு அவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார் நவீன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாவனாவுக்கும், நவீனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அக்டோபர் 26ந் தேதி திருமணத்தை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஏற்பாடுகளை இருவீட்டாரும் செய்து வந்தனர்.
இந்த நிலையில் கேரளாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாவனா. தனது திருமணத்துக்கு இன்னும் 3 மாதங்கள் இருக்கிறது என்றும், திருமணத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கிறேன் என்றும், திருமணத்துக்கு பிறகும் நடிப்பேன் என்றும் பேசினார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முடிவு செய்தபடி திருமணத்துக்கு இன்னும் ஒரு சில நாட்கள் இருக்கும் நிலையில் பாவனா 3 மாதங்கள் இருப்பதாக சொன்னது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து மீடியாக்கள் பாவனாவை தொடர்பு கொண்டு கேட்டபோது. "ஆம் திருமணத்தை ஜனவரி மாதத்திற்கு தள்ளி வைத்திருக்கிறோம்" என்று கூறியிருக்கிறார். ஆனால் அதற்கான காரணத்தை அவர் தெரிவிக்க மறுத்துவிட்டார். படங்களின் ஷூட்டிங் காரணமாக திருமணம் தள்ளி போய் உள்ளதாக கூறப்படுகிறது.