சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் இன்று(அக்., 13) காலை ஒரு முக்கியமான செய்தி குறிப்பை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் திரையரங்க உரிமையாளர்களுக்கு 6 கட்டளைகள் போட்டிருக்கிறார் அது வருமாறு:
1.அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும்.
2. தியேட்டர் கேன்டீன்களில் விற்கப்படும் பொருட்களை, அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் எம்.ஆர்.பி விலையில்தான் விற்கப்பட வேண்டும்.
3. கேன்டீன்களில் அம்மா குடிநீர் பாட்டில்தான் விற்கப்பட வேண்டும் (விலை 10 ரூபாய்).
4. வெளியில் இருந்து தண்ணீர் கொண்டு வர மக்களை அனுமதிக்க வேண்டும்
5. பார்கிங் கட்டணம் வசூலிக்க கூடாது.
6. ஆன்லைன் கட்டணங்களையும் ரத்து செய்ய வேண்டும்.
விதிமுறைகளை மீறி அதிக விலைக்கு டிக்கெட் விற்கும் தியேட்டர்கள் பற்றி பொதுமக்கள் அறிந்தால் உடனே புகார் அளிக்கலாம். மேலும் அதிக விலைக்கு டிக்கெட் விற்கும் தியேட்டர்கள் மீது தயாரிப்பாளர்கள் சங்கம் அரசிடம் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு விஷால் தெரிவித்திருக்கிறார்.
இது நாளை முதல் அமுலுக்கு வருகிறது. எத்தனை தியேட்டர்கள், குறிப்பாக மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் எந்த அளவிற்கு இதை பின்பற்றும் என்பது போகப்போகத்தான் தெரியும்.