சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
போதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் நடிகர் ஜெய்யின் ஓட்டுனர் உரிமம் 6 மாதத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதோடு ரூ.5500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ஜெய் மதுவிருந்து ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு போதையில் காரை ஓட்டி, அடையாறு பாலத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். இது தொடர்பாக ஜெய் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு சைதாப்பேட்டை கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் ஜெய், நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவிட்டிருந்த நிலையில், அவர் அஜராகாததால் இரண்டு நாளில் ஜெய்யை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஜெய் இன்று காலை சரண் அடைந்தார்.
தொடர்ந்து நீதிபதியிடம், தான் போதையில் கார் ஓட்டியதை ஒப்புக் கொண்டார் ஜெய். இதையடுத்து, ஜெய்யின் ஓட்டுனர் உரிமத்தை 6 மாத காலத்திற்கு ரத்து செய்ய நீதிபதி உத்தரவிட்டார். அதோடு ரூ.5,500 அபாராதமும் விதித்தார். நீதிபதியின் இந்த உத்தரவால் 6 மாத காலத்திற்கு ஜெய் காரை ஓட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே இதேப்போன்று ஜெய் போதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தி இருக்கிறார்.