அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் |
சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 10-வது படமான 'நெஞ்சில் துணிவிருந்தால்' நவம்பர் 3 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. சுசீந்திரன் இயக்கத்தில் டி.இமான் இசை அமைக்கும் ஐந்தாவது படம் இது. இப்படத்தின் கதாநாயகனாக தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷனும், விக்ராந்தும் நடித்திருக்கிறார்கள். ஆனால் படத்தின் விளம்பரங்களில் தொடர்ந்து இருட்டடிப்பு செய்யப்பட்டு வருகிறார் விக்ராந்த்.
இது குறித்து விக்ராந்த் வெளிப்படையாக தன்னுடைய மன வருத்தத்தை சொல்லவில்லை. இந்நிலையில், நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இது பற்றி விளக்கம் அளித்தார் இயக்குநர் சுசீந்திரன்.
“இந்த படம் தமிழ், தெலுங்குன்னு ரெண்டு மொழியில் உருவாகிறது. இதற்கு காரணம் யாருன்னா இந்தப்படத்துல கதாநாயகனாக நடிச்சிருக்குற சந்தீப் கிஷன் தான். அவருதான் இந்த படத்துக்கான தெலுங்கு தயாரிப்பாளர்களை கொண்டு வந்தாங்க. இந்த படத்துல இன்னொரு ஹீரோவா விக்ராந்த் நடிச்சிருக்கார்.
ஆனா, அவரோட ஒரு படத்தை கூட போஸ்டர்லயோ, விளம்பரங்கள்லயோ போட்டிருக்க மாட்டேன். விக்ராந்த், நீ அதை தவறா எடுத்துக்க வேண்டாம். நான் உருவாக்குன ஒரு ஹீரோதான் விஷ்ணு விஷால்! அவரைப்போல இப்போ நான் உன்னை (விஷ்ணு விஷால்) ஒரு ஹீரோவா உருவாக்கிகிட்டு இருக்கேன். கூடிய விரைவுல இந்த தமிழ்சினிமாவுல நீயும் ஒரு ஹீரோதான்'' என்றார்.