சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவ் பேரனும், முன்னணி நடிகர் நாகர்ஜுனாவின் மகனும், இளம் நடிகருமான நாக சைதன்யாயும், சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த நடிகை சமந்தாவும் காதலித்து வந்தனர். சமந்தா தமிழில் சின்ன சின்ன படங்களில் நடித்து வந்தவர்.
பின்னர் தெலுங்கிற்கு சென்று முன்னணி நடிகை ஆனார். இருவரும் தமிழில் வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தனர். அப்போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. ஆரம்பத்தில் காதலுக்கு கடும் எதிர்ப்பு இருந்தது. அதையும் மீறி இருவரும் லிவ்விங் டூ கெதராக வாழத் தொடங்கினர். இதனால் இருவருக்கும் திருணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று கோவாவில் உள்ள டபிள்யூ என்ற 7 நட்சத்திர கடற்கரை ஓட்டலில் திருமணம் வெகு விமர்சையாக நடந்தது. நள்ளிரவு 11.52 மணிக்கு சமந்தா கழுத்தில் நாக சைதன்யா தாலிகட்டினார். திருமணத்துக்கு முன்பும் திருமணம் முடிந்த பிறகும் ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டமாக இருந்தது.
திருமணத்துக்காக ஓட்டலை மின் விளக்குகளால் அலங்கரித்து இருந்தனர். உறவினர்கள் 2 தனி விமானத்தில் கோவா சென்று இருந்தனர். நாக சைதன்யா, சமந்தாவின் குடும்பங்களை சேர்ந்த 150 பேர் மட்டுமே திருமணத்துக்கு வந்து இருந்தனர். நடிகர்-நடிகைகள், அரசியல் பிரமுகர்கள் யாரும் அழைக்கப்படவில்லை. இருந்தாலும் பாடகி சின்மயி அவரது கணவரும், நடிகருமான ராகுல் பங்கேற்றனர். நேற்று மாலை 3 மணிக்கு சமந்தாவுக்கு மருதானி சடங்குகள் நடந்தன.
நாகசைதன்யாவின் பாட்டி ராஜேஸ்வரி புடைவையை நவீன வேலைப்பாடுகளுடன் புதுப்பித்து திருமண புடைவையாக சமந்தா உடுத்தி இருந்தார்.
சமந்தா கிறிஸ்தவ சமயத்தை சேர்ந்தவர் என்பதால் இன்று மாலை கோவாவில் உள்ள தேவாலயத்தில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்தது. அதன் பிறகு மீண்டும் ஒட்டலில் விருந்து நடக்கிறது. அடுத்த வாரம் ஐதராபாத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.