சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
காற்று வெளியிடை படத்தின் தோல்விக்குப் பிறகு மணிரத்னம் என்ன படத்தை இயக்கப் போகிறார், அதில் யார் நடிக்கப் போகிறார்கள் என கடந்த சில வாரங்களாகவே பலவிதமான தகவல்கள் வெளிவந்தன. ஆனால், யாரும் எதிர்பார்க்காத விதத்தில் அவருடைய நட்சத்திரத் தேர்வு அமைந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, பகத் பாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் என ஒரு வித்தியாசமான கூட்டணியை உருவாக்கியுள்ளார் இயக்குனர் மணிரத்னம். இவர்கள் அனைவருமே இப்போதைக்கு மிகவும் பிஸியாக இருக்கும் நட்சத்திரங்கள்தான். ஒருவருக்கொருவர் பொருத்தமில்லாத தனித் தன்மையுடன் கூடியவர்கள் இவர்கள். இப்படி ஒரு கூட்டணியை வைத்துக் கொண்டு எந்த மாதிரியான படத்தை மணிரத்னம் கொடுக்கப் போகிறார் என்று ஒரு எதிர்பார்ப்பை இந்த அறிவிப்பிலேயே ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
மற்றவர்களின் தேர்வு எப்படியோ, ஆனால், சிம்புவைத் தேர்வு செய்தது மட்டுமே திரையுலகத்தில் உள்ள பலரையும் வியக்க வைத்துள்ளது. அவர்களது சொந்தத் தயாரிப்பில் உருவான படத்திற்கே படப்பிடிப்பிற்கு நேரத்திற்கு வரமாட்டார் சிம்பு, அப்படியிருக்கு அதைப் பற்றித் தெரிந்தும் மணிரத்னம் அவரைத் தேர்வு செய்திருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக உள்ளது என்கிறார்கள்.
விண்ணைத் தாண்டி வருவாயா படத்திற்குப் பிறகு வெற்றிப் படங்களைக் கொடுக்க முடியாத சிம்பு இந்த வாய்ப்பையாவது சரியாகப் பயன்படுத்தி மணிரத்திற்கு ஒத்துழைப்பு கொடுப்பாரா என்று திரையுலகத்தில் உள்ளவர்களே கேள்வி கேட்கிறார்கள். அது சிம்புவுக்குக் கேட்டால் சரி.