சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
விஜய் தொலைக்காட்சியில் கமல் நடத்தி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி, வார இறுதியில் கமலின் அரசியல் மேடையாக மாறிவிடுகிறது. தனது அரசியல் கருத்துக்களை ஆணித்தரமாக கூறி வருகிறார். கடந்த வார இறுதி நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
நீட் தேர்வு பிரச்னையில் நம் பிள்ளைகள் தெருவில் நிற்கிறார்கள். அவர்களை தெருவில் நிறுத்தி விட்டோம். அங்கே நிற்கும் பிள்ளைகள் அனைவரும் விளையும் பயிர்கள். நமது பிள்ளைகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பொறுப்பை எங்கோ தவற விட்டு விட்டோம் . அவர்களை கல்விக்கூடத்திற்கு அனுப்பி விட்டு நாம் தான் போராடியிருக்க வேண்டும்.
பக்கத்து மாநிலங்களில் இருக்கிறவர்கள் 'நீட்'டை ஏற்றுக்கொண்டு விட்டார்களே, நீங்கள் மட்டும் ஏன் ஏற்க மறுக்கிறீர்கள் என்று கேட்கலாம். அவர்களெல்லாம் அதற்கு தேவையான முன் ஜாக்கிரதையில் தயார் நிலையில் இருந்தார்கள். அதனால் அவர்களால் நீட் தேர்வை எதிர்கொள்ள முடிந்தது. இங்கே அதற்கான எந்த ஏற்பாடுகளையும் நாம் செய்யவில்லை.
பன்முகம், பல மொழிகள் இருக்கும் இந்த நாட்டில் மாநில அரசுகளிடம் தான் கல்வி உரிமை இருக்க வேண்டும். முன்பு அப்படித்தான் இருந்தது. எமர்ஜென்சி சமயத்தில் அந்த உரிமையை தவற விட்டோம். அதை மையத்தில் கொண்டு போய் வைத்துக்கொண்டார்கள் . அதன்பிறகு அதில் திருத்தங்கள் செய்யப்படவில்லை. மாநிலங்கள் கல்வி திட்டங்களை வகுக்கும் அந்தஸ்தை, பொறுப்பை, பலத்தை, சக்தியை தங்கள் கையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றார் கமல்.