அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் |
நடிகை ப்ரியாமணி தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் என்றாலும் பெங்களூருவாசி. பாரதிராஜா இயக்கிய கண்களால் கைது செய் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு சில படங்களில் நடித்தாலும் பிரியாமணியை அடையாளம் காட்டியது அமீர் இயக்கிய பருத்தி வீரன் படம் தான். அந்தப் படத்திற்காக தேசிய விருது பெற்றார். அதன் பிறகு தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் நடித்தார்.
பிரியாமணிக்கு இப்போது மார்க்கெட் இல்லை. பல வருடங்களாக அவர் மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் முஸ்தபா ராஜை காதலித்து வந்தார். முஸ்தபா ராஜ் ஏற்பாடு செய்த ஒரு நட்சத்திர கலை நிகழ்ச்சியில் பிரியாமணி கலந்து கொண்டபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். கடந்த ஆண்டு மே மாதம் 25ந் தேதி இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. அதற்கு பிறகு இருவரும் பிரிந்து விட்டார்கள். நிச்சயதார்த்தம் ரத்து செய்யப்பட்டது என்றெல்லாம் செய்திகள் வந்தது. இதனை பிரியாமணி ஒத்துக் கொள்ளவும் இல்லை. மறுக்கவும் இல்லை.
இந்த நிலையில் பிரியாமணியும், முஸ்தபா ராஜும் நேற்று பெங்களூருவில் எளிய முறையில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தில் நெருக்கமான உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். திருமணம் நடக்கும் இடத்தைகூட பிரியாமணி ரகசியமாக வைத்திருந்தார். இன்று பெங்களூரு நட்சத்திர ஓட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் நண்பர்கள், திரையுலக பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.
"நானும் முஸ்தபாவும் வெவ்வேறு மத்தை சேர்ந்தவர்கள். அதனால் யாரும் புண்படக்கூடாது என்பதற்காக எந்த மதத்தையும் சாராமல் பதிவு திருமணம் செய்து கொண்டோம். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்" என்கிறார் ப்ரியாமணி.