சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
விஜய் நடித்த புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை படங்களை இயக்கிய ஜெகன்நாத் இயக்கும் புதிய படம் என் ஆளோட செருப்ப காணோம். இதில் பசங்க படத்தில் நடித்த பாண்டி ஹீரோவாக நடிக்கிறார். இப்போது அவர் பெயர் தமிழ், ஹீரோயினாக ஆனந்தி நடிக்கிறார். முதலில் பாண்டியுடன் நடிக்க ஆனந்தி மறுத்துள்ளார். இதுகுறித்து இயக்குனர் ஜெகன்நாத் கூறியதாவது:
என் ஆளோட செருப்ப காணோம் என்கிற படத்தின் தலைப்பிலேயே கதை இருக்கிறது. சுமாரான பையன் சூப்பரான ஒரு பெண்ணை காதலிக்கிறான். அவள் செண்டிமெண்டாக நினைக்கும் செருப்பு காணாமல் போகிறது. அதை தேடி காதலன் செல்கிறான். அப்படி செல்லும்போது அவனுக்கு பல புதிய அனுபவங்கள் கிடைக்கிறது. ஒரு சாதாரண செருப்புகூட அசாதாராண மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதுதான் படத்தின் கதை.
இதில் சுமாரான பையனாக நடிக்க பாண்டி தேர்வானர். 100 பேருக்கு ஆடிசன் நடத்தியதில் பாண்டி செலக்ட் ஆனார். ஆனால் ஹீரோயின் அழகாக இருக்க வேண்டும் என்பதால் ஆனந்தியை தேர்வு செய்தோம். ஹீரோ பாண்டி என்றதும் அதிர்ச்சி அடைந்த ஆனந்தி அய்யய்போ அந்த கருப்பு காமெடி பையனா என்று அதிர்ந்தார். அவர் பசங்க படத்தில் பாண்டியின் தோற்றத்தை நினைத்து மறுத்தார்.
உடனே நான் பாண்டியை அழைத்துக் கொண்டு ஸ்டூடியோவுக்கு சென்று தனி போட்டோ ஷூட் நடத்தினேன். விதவிதமான காஸ்ட்யூமில் படம் எடுத்து ஆனந்தியிடம் காட்டினேன். அவரா இவர்னு ஆச்சர்யப்பட்டவர் அதன் பிறகு நடிக்க ஒப்புக் கொண்டார். என்கிறார் ஜெகன்நாத்.