சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
மலையாள முன்னணி நடிகரான பகத் பாசில் வேலைக்காரன் படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். ஆரண்ய காண்டம் தியாகராஜன் குமாராராஜா படத்திலும் நடித்து வருகிறார். தொடர்ந்து தமிழில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறுகிறார் பகத் பாசில். அவர் மேலும் கூறியதாவது:
மலையாளத்தில் மட்டும் நடிக்க வேண்டும் என்று உறுதியோடு இருந்தேன். காரணம் மொழி பிரச்சினை. ஆனால் இயக்குனர் மோகன்ராஜா கேரளா வரையும் வந்து என்னிடம் கதை சொல்லி இம்ப்ரஸ் பண்ணினார். ஒரு நல்ல ப்ராஜக்டை மிஸ் பண்ண வேண்டாமுன்னு நானும் கிளம்பி வந்துட்டேன். நல்லதுக்கும், கெட்டதுக்குமான போராட்டம்தான் கதை. இதுல நான் நல்லவனா கெட்டவனா என்பதை இப்போது சொல்ல முடியாது.
ஆரம்பத்துல தமிழ்ல பேசுறதுக்கு ரொம்ப கஷ்டப்பட்டேன். சிவகார்த்தியேன்தான் உதவி பண்ணினார். இப்போது அவர் எனது நெருக்கமான நண்பராகி விட்டார். அப்பா படத்தில் நடிக்கிற காலத்திலிருந்து நயன்தாராவை தெரியும். ஆனால் இப்போதுதான் அவருடன் சேர்ந்து நடிக்கிறேன்.
தமிழ் சினிமாக்கள் நிறைய பார்க்கிறேன். விசாரணை படம் என்னை மிரள வைத்த படம். நல்ல திறமைசாலிகள் சினிமாவுக்கு வர்றாங்க. புதுசு புதுசா எதையாவது செய்து ஆச்சர்யப்படுத்துறாங்க. அவர்களோடு நானும் சேர்ந்து பணியாற்ற விரும்புகிறேன். அதை நான் நடிக்கிற படத்தின் வெற்றிகள் தான் தீர்மானிக்கும். என்றார்.